Saturday, June 26, 2010

குரல் ஆரோக்கியம் நம் கையில்!

சிவப்பிரியா கிருஷ்ணன்
An article by Sivapriya Krishnan : First Published in Dinamani : 25 Jun 2010 02:44:00 AM IST


குரல் வளம், கடவுள் கொடுத்த வரம். ஒவ்வொருவரின் குரலும் அவர் அவரின் தனித்துவத்தை எடுத்து காட்டுகிறது. குரலை வளைய வைத்து தம் வசப்படுத்தும் திறமையை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். சரியான பயிற்சியின் மூலம் அப்படி வளர்த்துக்கொள்ள முடியும்'' என்கிறார் டாக்டர் எஸ். ஏ. கே துர்கா.

துர்கா 1965-லிருந்து குரலை பற்றின ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். அப்போது, வீணை தனம்மாள் பரம்பரையிலிருந்து வந்த மூத்த புல்லாங்குழல் கலைஞர் டி. விஸ்வநாதன் சென்னைப் பல்கலைக்கழகத்தில் ரீடர் மற்றும் துறைத் தலைவராகப் பணியாற்றி கொண்டிருந்தார். கர்நாடக இசைக்குத் தகுந்தவாறு குரலை எப்படி தயார் செய்யலாம் என்று ஆராய்ச்சி செய்யும்படி இவரை ஊக்குவித்தார். இதை ஒரு முழு ஈடுபாட்டுடன் எடுத்துக் கொண்டு, துர்காவும் லாரிங்காலஜி என்னும் துறையில் போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ பெற்று, அயல் நாட்டுக்கும் சென்று இன இசையியலில் முனைவர் பட்டமும் பெற்றார்.

டாக்டர் துர்கா ஒரு சிறந்த பாடகி. மகராஜபுரம் விஸ்வநாத அய்யரின் சிஷ்யை. கர்நாடக சங்கீதத்தில் குரலை எப்படி கையாளுகிறார்கள் என்று நன்கு அறிந்தவர். இயற்கைபடி குரலுக்கு மூன்று ஸ்தாயியில் பாடும் திறமை கிடையாது. அதை சாதகம் செய்து வர வைக்கிறோம் என்கிறார். 92 முதல் 95 சதவீத பாடகர்கள் அதை சாதகத்தினால் வரவைக்கிறார்களாம். குரல்வளம் சம்பந்தமான சி.டி. தயாரிப்பில் இருக்கும் துர்கா, அவர் மேற்கொண்டிருக்கும் ஆய்வு சம்பந்தமாக பல நல்ல நுணுக்கமான விஷயங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார். "

"நம் சங்கீதத்தில் குரலை வித விதமாக பிரயோகப்படுத்த வேண்டும். நாட்டுப்புற பாடலை போல் அல்லாமல் சாஸ்திரிய சங்கீதத்திற்குக் குரலில் ரேன்ஜ் என்னும், வெவ்வேறு ஸ்தாயியில் பாடும் திறமை தேவைப்படுகிறது. இதனால் சாதகம் செய்யும்முறை சரியாக இருக்க வேண்டும். அநாவசியமாக கத்தியோ அல்லது குறைந்த ஸ்ருதியிலும், வெவ்வேறு ஸ்ருதியிலும் பாடினாலும் குரல் கெட்டுவிடும். அவரவர் குரலின் தன்மைக்கு ஏற்ற ஸ்ருதியில் பாட வேண்டும்'' என்கிறார். "

"குரலைப் பாட வைப்பது, நம் மூச்சு விடும் தினுசில் இருக்கிறது. சீக்கிரமாக மூச்சை உள் இழுப்பது, அளவாக வெளியேவிடுவது என்று முறையாக செய்தால்தான் பாட்டு பாட வரும். அகாரமாக பாடுவதற்கு மூச்சை நன்றாக கண்ட்ரோல் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் குரலில் நடுக்கம் தெரியும். நமது குரல் நம் மனதுடனும், மூளையுடனும் இணைந்து இருக்கிறது.

நன்றாக பாட வேண்டும் என்கிற உற்சாகத்தையும் பாட முடியும் என்கிற நம்பிக்கையையும் வளர்த்து கொண்டால் தான், மேலும் நம் குரலை சாதகத்தினால் செம்மைப் படுத்த முடியும். பயம் தெளிந்தால் நடுக்கம் தெளியும், குரலும் நன்றாக ஒத்து உழைக்கும்.

ப்ரணாயாமம், சரியான, மிதமான உணவு என்று நமக்கே உரிய கட்டுப்பாட்டுக்குள் இருந்தால், குரலை நன்றாகப் பாதுகாக்க முடியும். கச்சேரி மேடையில் பாடும் முறை, மைக்கை கையாளும் விதம், இதெல்லாம், பாடகர் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்.

அக்காலத்தில் குருகுல வாசத்தில் இருந்து பல விஷயங்களை தெரிந்து கொள்ளும் வாய்ப்பு இருந்தது. இப்பொழுது, அந்த நிலை இல்லை. மேலும் பல விதமான சூழ்நிலைகள் மாறி வரும் இக்காலத்தில் இதை விஞ்ஞானபூர்வமாக எடுத்து உரைக்க வேண்டிய கட்டாயமும் இருக்கிறது'' என்கிறார் டாக்டர் துர்கா.

பல மாணவர்களுக்கு இதை ஒரு வகுப்பாக நடத்தி வருகிறார். குரலை பாதுகாத்து, குரலை சரியாகவும், நேர்த்தியாகவும் செம்மைப்படுத்தும் விதிமுறைகளை இந்த வகுப்பில் எடுத்துக் கூறினார் அவர். இன்னும் நிறைய பேர் பயன் அடையும் வகையில், இதை சிடி வடிவத்தில், ஸ்வாதி ஸôஃப்ட் சொல்யூஷன் வெளியிட்டிருக்கிறது.

ஒரு பாடகருக்கு குரல் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியம், அதை எப்படி பாதுகாப்பது என்பதை நேர்த்தியாக எடுத்து கூறும் டாக்டர் துர்காவி இப்பணி நமது இசையுலக இளைய தலைமுறைக்கு அவர் செய்யும் மாபெரும் சேவை. அதை பயன் படுத்திக் கொள்வது பாடுபவர்களிடம்தான் இருக்கிறது.

Wednesday, June 23, 2010

Indiblogger Rank



Dear Sivapriya Krishnan,

The new rank for your blog sivapriyakrishnan speaks is now 43.



What does IndiRank mean?
It's like runs in a game of cricket - the higher the score, the better your ranking. Blogs are evaluated on a scale of 1-100, and the top ranks are in the range of 80-90. Several blogs may share the same rank.

Keep blogging!

The IndiBlogger Team

Saturday, June 19, 2010

The Indian Male has Arrived !!!

David Davidar .... the blue eyed boy of Penguin Publications, ousted on account of sexual harassment meted to a female co-worker.

While the whole episode does reek of reckless obsessions of a superior male ego, it also brings out the other side of the same coin ...., a true but visible fact
"that the Indian Male has truly arrived !!! "

Typically the Indian always bowed down to the "white-skin obsession", enslavened by the residue of the "Raj" !

Time and again we have been bombarded with stories of the white man harassing an Indian woman. A white woman harassing an Indian male.So many stereotypes !! So many tales heard so often, so many tales unheard and buried under the soil beautifully !!

However today we do see role reversals, thanks to a different impact of the "so called globalisation factor" and the "social permissiveness" that gets associated with anything and everything modern.

The birth, the new avatar of an all new Indian !!

Here is a case of a brown skin, making advances towards a white skin, taking it to intolerable lengths, then using his power to sack the white skin and then smartly announcing that he is stepping down to pursue more creative options !!!(when he is actually sacked, fired)!!!

We always heard similar tales, but now with a twist in characters !!!

Shobha De I am sure is listening and maybe ready for "Sweet Obsessions : Part 2" !!!, where David became Goliath !!

Thursday, June 10, 2010

இது நல்ல தருணம்


இது நல்ல தருணம்
- சிவபிரியா கிருஷ்ணன்

First Published : 11 Jun 2010 02:51:28 AM IST : DINAMANI Tamil Paper


தருணம் என்கிற பெயரில் ஒரு குறுந்தகடு ஜுன் 8ஆம் தேதி அன்று சிவகாமி பெத்தாச்சி அரங்கில் வெளியிடப்பட்டது. வழக்கமான குறுந்தகடு வெளியீட்டு விழா போல இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.

தருணம் என்கிற இந்த குறுந்தகடில் அப்படி என்னதான் இருக்கிறது?

ஒரு சோற்றுப்பதம் போல தமிழின் ஆகச் சிறந்த சங்க கால, இடைக்கால தமிழ் இலக்கியச் செய்யுள்களுக்கு இதில் இசை வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. தவிர பாசுரங்கள், பதிகங்கள், தமிழ்க் கீர்த்தனைகள் போன்றவற்றைப் பாடல் வடிவத்தில் அமைத்து, பியானோ உடன் கூடிய வாய்ப்பட்டாகத் தொகுத்து வழங்கி இருக்கிறார்கள் பாடகர் சிக்கில் குருசரணும், பியானிஸ்ட் அனில் ஸ்ரீநிவாசனும்.

இதன் முதல் குறுந்தகடை மாநிலங்கவை உறுப்பினர் கனிமொழி வெளியிட, இந்து நாளிதழ் இணை ஆசிரியர் நிர்மலா லக்ஷ்மன் பெற்றுக் கொண்டார். உலக செந்தமிழ் மாநாட்டிற்கு இது ஒரு அழகான முன்னறிவிப்பு என்று சுவையாகவும் சுருக்கமாகவும் புகழ்ந்து பேசினார் கனிமொழி. தமிழ் மொழியை இசையால் அலங்கரிக்கும் இனிய வாய்ப்பைத் தவறவிடவில்லை குருசரணும் அனில் ஸ்ரீனிவாசனும்.

"இந் தக் கச்சேரியை கிராமி விருது பெற்ற மறைந்த சவுண்ட் என்ஜினீயர் ஸ்ரீதர் மற்றும் இசையமைப்பாளர் மகேஷ் அவர்களுக்கு அர்பணிக்கிறோம்' என்று அறிவித்தார்கள். சிடி விற்பனையில் ஒரு பங்கு மகேஷ் நினைவு அறக்கட்டளைக்கு வழங்கப்படும் என்றும் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் அகநானூறு, திருப்புகழ், திவ்ய பிரபந்தம் உள்ளிட்ட பாடல்களுக்கு இசையமைத்து, மேடையில் பாடினார்கள். இத்துடன், பாபநாசம் சிவன், உளுந்தூர்பேட்டை ஷண்முகசுந்தரம், ஊத்துக்காடு வேங்கடகவி போன்றோர் இயற்றிய பாடல்களையும் குரலாலும் பியானோவாலும் சிறப்பித்தார்கள்.

ஸ்ரீனி வாசனுக்கும், குருசரணுக்கும் பரஸ்பரம் ஒரு நல்ல இணைப்பு தெரிகிறது. வெகு நாட்கள் கூடவே பாடி, வாசித்துப் பழகிவிட்டதால், அதனால் வரும் இயல்பும், நட்பும், அவர்கள் மத்தியில் தெரிந்தது.

எல்லாமே நன்றாக இருந்தாலும் ஒரு சில விஷயங்கள் மனதை நெருடின.
அரங்கத்தை இருட்டாக்கி, சினிமா தியேட்டர் போல் அமைத்தால்தான், புது இசை முயற்சிகளை ரசிக்க முடியுமா?
மென்மையான, சங்கீதத்திற்கு மென்மையான ஒளி எவ்வளவோ பொருத்தமாக இருந்திருக்கும்? திரையில் காணும் படம் போல் எங்கோ கலைஞர்கள், எங்கோ ரசிகர்கள் என்று ஒரு பிளவை ஏற்படுத்தும் வகையில் இருட்டு ஒரு தடையாகவே அமைந்துவிட்டது.

பாட்டை அறிமுகப்படுத்துகிறேன் என்கிற பெயரில் அகநானூறையும், பாசுரங்களையும், ஆங்கிலத்தில், அதுவும் புரியாத ஒரு நுனி நாக்கு ஆங்கிலத்தில் விளக்கினால் தகுமா? ஒரு முறை தமிழில் எடுத்துரைத்து, பிறகு ஆங்கிலத்தில் விளக்கம் கூறியிருக்கலாமே? முடியாதது ஒன்றும் இல்லை. அனில் ஸ்ரீநிவாசனும்கூட ஆரம்பத்தில் "டாமில்' என்றுதான் சொன்னார். பிறகு திருத்திக் கொண்டார்.

செம்மொழியான தமிழ் மொழி வாழ்ந்து செழிப்பதற்கு அதைச் சிறப்பாக உச்சரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். அதை ஒரு கொள்கையாக எடுத்துக் கொண்டு செயல்பட இச் செம்மொழி மாநாடுத் தருணத்தில் உறுதி எடுத்துக் கொள்ளலாமே!

தேனொலிக்கும் வானொலி


தேனொலிக்கும் வானொலி
- சிவப்ரியா
First Published : 28 May 2010 02:18:35 AM IST : DINAMANI Tamil Paper

Last Updated :

"ஆல் இந்தியா ரேடியோ' - சென்னை வானொலி நிலையம் என்கிற இந்தக் காலை வணக்கம் இசைப் பிரியர்களுக்கு வரப்பிரசாதம்.

இம்மாதம் 24-ஆம் தேதி, திங்கள்கிழமை காலை வானொலியில் 8-45 மணிக்கு சென்னை "பி' ஸ்டேஷனில் ஒலிபரப்பான ஒரு நிகழ்ச்சி நம்மை ஆன்மிக உலகத்திற்கே எடுத்துச் சென்று ஆனந்த வெள்ளத்தில் ஆழ்த்தியது.

1968 - 69-ல் பதிவு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சி வானொலியின் தரத்திற்கே ஒரு எடுத்துக்காட்டாக இருந்தது. அன்றைக்கு ஒலிபரப்பானது ஒரு அருமையான இசைச் சித்திரம். அது மாபெரும் ஞானியாக விளங்கிய ஸதாசிவ ப்ரம்மேந்திரர் பற்றியும் அவர் இயற்றிய பாடல்களைப் பற்றியுமான இசைச் சித்திரம் அது.

இந்த இசைச் சித்திரம் மிகவும் நேர்த்தியாக அமைத்த ஒன்றாக இருந்தது. இரண்டு பேர் குரு - சிஷ்யன் என்கிற பாத்திரத்தில் கேள்வி - பதில் மூலம் பல ருசிகரமான சம்பவங்களையும், விஷயங்களையும் நமக்கு அளித்தார்கள். ஸதாசிவ ப்ரம்மேந்திரரின் வாழ்க்கை வரலாறு, அவர் சன்யாஸம் வாங்கிய சம்பவம், பரம மௌனி ஆன கட்டம் என்று பலவிதமான தகவல்கள் நமக்கு அளிக்கப்பட்டது.

ஸதாசிவர் பரம அத்வைதி. நிர்குணம், நிராகாரம், ஸ்ர்வம் ப்ரம மயம் என்று உச்சகட்ட அத்வைத விசாரங்கள் கொண்டவர். இருப்பினும் அந்த நிலையை அடைவதற்கு ஸகுண வடிவமே மார்க்கம் என்கிற வகையில் ராமர், கிருஷ்ணர் லீலைகளைப் பற்றி பலவித பாடல்கள் அமைத்துள்ளார் என்று தெரியவந்தது.

அவர் இயற்றிய பாடல்களுக்கு இசை வடிவம் கொடுத்து மெட்டு அமைத்துள்ளார் மறைந்த மூத்த கலைஞர் செம்மங்குடி ஸ்ரீனிவாச அய்யர். அவ்வண்ணமே அப்பாடல்களைப் பாடி நடுவில் ஸ்லோகங்களை விருத்தமாகப் பாடி, நடுநடுவே கேள்வி பதில் மூலம் விஷயங்களைத் தெளிவுபடுத்தி, நேயர்களுக்கு ஒரு நல்ல விஷய விருந்தைச் சமைத்திருந்தார்கள். குகன் என்பவரால் இந்நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டு எஸ்.ராஜம் தலைமையில் ஆர். வேதவல்லி, எஸ்.பிரேமா, எஸ்.ஐயர் ஆகியோர் உடன் பாடின இந்நிகழ்ச்சி ஓர் அற்புதமான பொக்கிஷம்.

துல்லியமான ரிக்கார்டிங், அருமையான பாட்டு, தெளிவான கேள்வி பதில்கள் என்று ஒவ்வொரு அம்சமும் மிகவும் கோர்வையாகச் சித்தரித்து அமைத்திருந்தார்கள். வானொலியின் இசை சேவையை நினைக்கப் பெருமையாக இருந்தது.

ஆல் இந்தியா ரேடியோவின் உதவியால் எத்துணை வித்வான்களின் கச்சேரிகள், இசை உரைகள், இசை சொற்பொழிவு, ஹரிகதா காலúக்ஷபம், வாத்திய விருந்தா என்று பலவகையான நிகழ்ச்சிகள் நம் செவிக்கு உணவாகக் கிட்டியிருக்கிறது? வாத்திய விருந்தா போன்ற ஸங்கீத அமைப்பில், பலவிதமான இசை கருவிகள், கலைஞர்கள் ஒன்று சேர்ந்து, ஒரே ஸ்ருதியில் பாட்டுகளை வாசித்து, வண்ணமயமான இசைக்கோலம் தீட்டி "வாத்திய விருந்தோ' என்று வியக்கும்படி அவரவர்கள் தங்கள் வித்வத்தைக் கூட்டிப் பங்கிட்டு கொண்டு நேயர்களை மகிழ்விக்கிறார்கள்.

ஆல் இந்தியா ரேடியோவில் நிறைய பெரிய வித்வான்கள் பணியாற்றியிருக்கிறார்கள், பணியாற்றி வருகிறார்கள். ரேடியோவில் பாடி பல பேர் பிரபலமாகி இருக்கிறார்கள்.

அதேபோல தூர்தர்ஷனிலும் பலதரப்பட்ட சாஸ்த்ரிய சம்பிரதாயமான நிகழ்ச்சிகள் பதிவு செய்து ஒளிபரப்புகிறார்கள். தூர்தர்ஷனில் பல நாள்களுக்கு முன்னால் "ஸ்வர ராக ஸீதா' என்று ஒரு தொடர் நிகழ்ச்சி மூலம் வெவ்வேறு ராகங்களின், பாட்டின் பரிணாமங்களை விளக்கினர். சினிமா - கர்நாடக இசை இதன் ஒற்றுமை - வேற்றுமைகளைக் காண்பிக்கும் வகையில் அமைந்த இந்த நிகழ்ச்சிக்கு நேயர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிட்டியது. கர்நாடக ஸங்கீத மகான்களின் வாழ்க்கை வரலாறு, ரஸிகப்பிரியா என்று ஒரு நிகழ்ச்சி பலவகை கச்சேரிகள், திருவையாறு தியாகராஜ ஆராதனை நேரடி ஒளிபரப்பு என்று ஏராளமான நிகழ்ச்சிகளைத் தூர்தர்ஷன் பதிவு செய்து காண்பித்து இருக்கிறது.

தூர்தர்ஷன் பொதிகையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி. இதில் நமது கர்நாடக சங்கீதத்தில் இருக்கும் 72 மேள கர்த்தா ராகங்களைப் பற்றின சுவையான நுணுக்கங்களை, அந்த ராகங்களில் உள்ள கிருதிகளை பாடிக் காண்பித்து, ஆறு முன்னணி, மூத்த கலைஞர்கள் ஆளுக்குப் பன்னிரண்டு ராகம் என்ற முறையில் வகுத்துக் கொண்டு ஒரு மாபெரும் இசை உரை நிகழ்த்தினர்.

வாராவாரம் வெள்ளிக்கிழமை அன்று இந்நிகழ்ச்சியைக் காண்பித்து இதனின் மறு ஒலிபரப்பை திங்களன்று காண்பித்து, எல்லோரும் கேட்டு, பார்த்து, தெரிந்து கொள்ளும் அளவிற்கு நமது வீட்டிற்கே கொண்டு வந்து சேர்த்தார்கள்.

வானொலி நிலையத்தில் ஒரு பிரம்மாண்டமான அரங்கம் இருக்கிறது. விஸ்தாரமான மேடை, நல்ல மைக் என்று அமைத்து கச்சேரிகளும் ரிக்கார்டிங்களும் செய்கிறார்கள். இது போன்ற நிகழ்ச்சிகளை நேயர்கள் நேரிலும் கண்டு களிக்கலாம்.

இவ்வளவு பொக்கிஷங்களை நிறைத்து வைத்து இருக்கும் இந்த இரண்டு நிறுவனங்களுமே நமது நாட்டின் கலா சிகரங்கள். நமது கலாசாரத்திற்குப் பெருமை, ஏற்றம் சேர்க்கக்கூடிய நிறுவனங்கள்.

விளம்பரங்களையே நிகழ்ச்சியாக்கும் தனியார் சேனலைப்போல இல்லாமல், நிகழ்ச்சிகளை சீர் கெடாமல் தொடர்ந்து ஒலிபரப்பும் விதம் மிகச் சிறந்தது.

இருப்பினும், ஒரு உத்வேகத்துடன் செயல்பட்டு நிர்வாக மாற்றங்கள் செய்து தொழிலாளர்களுக்கு பயிற்சி அளித்து, நிர்வாகத்தை செம்மைப்படுத்தினால் நன்றாக இருக்கும்.

பழைய ரிகார்டிங் எல்லாவற்றையும் "டிஜிடல்' செய்து மறு ஒலிபரப்பு செய்து, குறுந்தகடு வடிவத்தில் விற்பனையும் செய்ய முயற்சித்தால் நல்ல விஷயங்கள் ரசிகர்களுக்குக் கூடுதலாகப் போய் சேரும்.